Monday, 30 May 2016

எந்திரம் எழுதும் முறை

முதலில் வினாயகப் பெருமானை வழிபடவேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு 6 அங்குல நீளம் 6 அங்குல அகலம் உள்ள செம்பு அல்லது வெள்ளி தகட்டை எடுத்து கொள்ளுங்கள். எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன் ஆதி மூலகடவுளான விநாயகரை முதலில் வழிபடவேண்டும். எனவே கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு விநாயகரை மனதில் எண்ணி
அரி ஓம் திரிபுர சங்கரா விக்னேஸ்வர ரூபாடம் டம் சரணம் நின்னை நான் நம்பினேன்வா வா கணபதி மகா கணபதி என்நாவிலும் வாக்கிலும் வந்து நிற்க சிவா.
நெடுமால் திருமருகா நித்தம் முதலாககொடுமால் வினையறுக்கும் கொன்றே தடுமாறதுஎண் எழுத்து முப்பது வாயும் என் சித்தத்தே நிற்கஉத்தமனே உன் பாதம் பணி
அரி ஓம் சகல குரு பேந்தம் சமஸ்ட குருவேகெங்கா ஆதி குருவே ஜெகநாத குருஆத்ம சுத்தி பஞ்ச பூத தேவர்கள் காக்கஅண்ட பிண்ட சராசரமெல்லாம் என் முன் நிற்க சிவா.
என 3 முறை கூறி மனதில் தியானித்து குரு வணக்கத்தை சொல்லி பின் மூலகணபதியை  வணங்கி தகட்டிற்கு சாம்பிராணி காண்பித்து ஊதுபத்தியை ஏற்றி வைத்துக்கொண்டு தகட்டிற்கு சாப விமோசனம்கொடுக்க வேண்டும்.
ஓம் அகக்தியர் சாபம் நசி நசிஓம் பதினென்சித்தர்கள் சாபம் நசி நசிஒம் தேவர்கள் சாபம் நசி நசிஓம் எவரிட்ட சாபமாயினும் நசி நசிஒம் எந்திர தேவா உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா ஓம் சக்தி நிற்க சிவன் நிற்க சக்தியும் சிவனும் ஒத்து நிற்க சிவா.
- என 3 முறை கூறி சிறிது விபூதியை தகட்டின் மீது போடவும். தகடு சுத்தி ஆகி சாபவிமோசனம் பெறும்.
பேனாவில் உள்ள மை தீர்ந்துபோன லெட்டின் உதவியால் தகட்டில் எழுதலாம் வேறு தங்கம் செம்பு ஊசிகள் கொண்டும் எழுதலாம். ஆனால் தகடு கிழிந்துவிடவும் வாய்ப்பு உண்டு எனவே லெட்தான் உசிதமானது.
ஓம் பால கணபதியே நமஓம் சக்தி கணபதியே நமஓம் த்ருண கணபதியே நமஓம் பக்தி கணபதியே நமஓம் விக்னேஸ்வர ரூபாய நமஓம் மகா கணபதியே நம
என சொல்லவும். ஒவ்வொரு தடவையும் நம என்று சொல்லி முடியும் போது சிறிது விபூதி அல்லது பூ விநாயகர் முன் போடவும். பிறகு குரு வணக்கத்தை 11 முறை சொல்லி தியானித்து பூமியைத் தொட்டு வணங்கவும்.தகடு எழுத ஆரம்பித்து விட்டால் வேறு காரியம் சம்பந்தமாக இடையே எழுந்து போக்க்கூடாது ஒரே முறையில் எழுதி முடிக்கவேண்டும். தீய சிந்தனைகள் இல்லாதவாறு கணபதியின் சிந்தனை ஒன்றிலேயே மனம் ஈடுபட்டு இறுக்க வேண்டும். தகடு கிழிந்து விட்டால் வேறு தகடுதான் எழுதவேண்டும் ஓட்டை விழுந்த தகட்டை ஓடும் நீரில் (ஆறு கடல் வாய்கால்) போட்டு விடவேண்டும்.(எந்த தெய்வீக பொருளானாலும் கழிக்கும் போது ஓடும் நீரில் தான் போடவேண்டும்).
தகடு எழுதியவுடன் சூரிய ஒளியிலோ லைட் வெளிச்சத்திலோ நேராக துக்கிபிடித்து பார்த்தால் ஓட்டை விழுந்திருக்கிறதா இல்லையா என்பதை எளிதில் அறியலாம். ஒரு தகட்டில் எந்திரம் எழுதினால் மட்டும் போதாது அதற்கு உயிரூட்டவேண்டும். இதற்க்கு உருவேற்றுதல் என்று பொருள். ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் சொல்வது உரு எனப்படும்.

சொற்களுக்கு தனி சக்தி உண்டு நமசிவாய என்று ஒரு தரம் சொன்னால் ஒரு உரு. ஆயிரம் முறை சொன்னால் ஆயிரம் உரு எனப்படும். எனவே நாம் ஒரு தகட்டில் எந்திரம் எழுதி அதில் யந்திரத்திற்குறிய வசிய மை சிறிது தடவி விட்டு அந்த எந்திரத்துக்கு உரிய மந்திரத்தை  சொன்னால் அந்த தகட்டிற்கு உரு ஏறுகிறது. மையின் சிறப்பால் அந்த தேவதை எளிதில் வசம் அடைவதுடன் உருவும் வேகமாக தகட்டால் கிரகிக்கப்படுகிறது. இதுதான் உரு ஏற்றும் முறை ஆனால் இதனை முறையாக விதி முறைகளுடன் செய்யவேண்டும்.   

Saturday, 28 May 2016

சிவ பக்தர்கள் அவசியம் அறியவேண்டியவை

கேள்வி: நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன? 

பதில்: நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்கினி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்கிரகம் செய்வதுமாகும்

கேள்வி: தட்சினாமூர்த்தி திருக்கோலத் தத்துவம் என்றால் என்ன?  

பதில்: சிவனின் தட்சிணாமூரத்திக் கோலம் என்பது பிரம்ம நிலையை துலங்க வைப்பது அங்கே செயல் இல்லை. ஒரே மௌனம்தான்.வெளியில் சகல காரியங்களும் செய்யும் ஈசுவரன் எப்போதும் உள்ளே அடங்கி பிரமமாக இருக்கின்றார். பேசாமல் புரிவைக்கும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அவருக்கு முனனால் கீழே அமர்ந்துள்ள முனிவர்கள்  சனதர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்  நால்வரும் மௌன உபதேசம் பெறுகின்றார்கள் என்பதாகும்.

கேள்வி: மானின் தத்துவம் என்றால் என்ன?  

பதில்:சிவபெருமானின் கையில் உள்ள மான் என்ன தத்துவத்தை நமக்கு உணர்த்துவது என்றால். மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள். சிவபெருமான்தாம் வேதப்பொருளாக உள்ளவர். இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தினார். வேதநாயகன் ஈசன் என்பதை அவரின் கையில் உள்ள மான் உணர்த்துகின்றது.

கேள்வி: பாம்பு புலித்தோல் ஆகியவவை உணர்துகின்ற தத்துவங்கள் என்ன?  

பதில்.சிவனின் கழுத்தை சுற்றியுள்ள பாம்பு. நம்மை ஒவ்வொரு நிமிடமும் பாவப் படுகுழியில்தள்ள சந்தற்பம்பார்த்தபடி நச்சுப்பாம்பாக நம்மைச்சுற்றி வளைத்துக்கொள்ள காத்திருக்கின்றது என்பதையும், ஆடையாக அணிந்திருக்கும் புலித் தோல் நம்மனம் மிருக உணர்சிக்கு இணங்கக் கூடாது. உயர்வான குணத்துடன் இருக்கவேண்டும் என உணர்த்துகின்றன.

கேள்வி:-பிறை உணரத்தும் தத்துவம் என்ன?  

சிவனின் ஜடாமுடியில் இருக்கும் சந்திரன் நம் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் வரும் என்ற தத்துவத்தை சொல்லுகின்றது.

கேள்வி: கங்கை உணர்த்துகின்ற தத்துவம் என்ன?  

பதில்: ஜடாமுடியில் இ;ருக்கும் கங்கை சொல்லும் தத்துவமானது எப்பொழுதும் தன்னைப்போல் தூய்மையாக உள்ளம் இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றது.

கேள்வி ஐந்து நாகங்களை அணிந்திருக்கும் தத்துவம் என்ன.?  

பதில்: சிவபெருமான் ஐந்து நாகங்களை ஆபரணமாக அணிந்திருப்பதின் தத்துவம் யாதெனில் நம்மைச்சுற்றி நாகங்களைப்போல் நிற்கும் ஐந்து புலன்களை அடக்கி நிறுத்துவதை விளக்குயாகும்.

கேள்வி: அர்த்தநாதீஸ்வர தத்துவம் என்பதின் விளக்கம் என்ன..?  

புதில்: சிவன் அர்த்தநாதீஸவராக நிற்பது எமக்கு எதை உணர்துகின்றது என்றால் அவர் காமத்தை வென்றவர் என்பதையும். பெண்ணுக்கு சரிபாதி இடம் உண்டு என்பதையும் உணரவைக்கவே யாகும.;

கேள்வி: பஞ்சாட்சர மந்திர தத்துவம் என்றால் என்ன?  

பதில்: சைவசமயத்துகே உரித்தான பதி,பசு,பாசம் என்னும் தத்துவமும் இதனுள் அடங்கும்.
“நமசிவாய” என்பதில் நம- பசுவையும் சி-பதியையும் வய-பாசத்தையும் குறிக்கும். அதாவது பசுவாகிய ஆன்மாக்கள் பாசமாகிய சுகங்களை தொலைத்துப் பதியாகிய பரம்பொருளுடன் இணைதல் வேண்டும் என்ற பரமானந்த தத்துவத்தையும் இந்த நமசிவாய நமக்கு உணர்த்துகின்றது.

கேள்வி: ரிஷப வாகனத் தத்துவ விளக்கமென்ன.?  

பதில்: தரும தேவதையானவள் தான் அழியாது என்றும் நித்தியமாக இருக்க விரும்பி ரிஷப உருவம்கொண்டு சிவனிடத்தில் வேண்டினாள். சிவனும் அவள் வேண்டுதலை ஏற்று ரிஷபத்தைவாகனமாக ஏற்றுக் கொண்டார்.தருமத்துக்கு அழிவில்லை. தருமத்தையே வாகனமாக கொண்டவன் இறைவன் என்பதையே சிவபெருமானின் ரிஷபவாகனம் உணரத்துகின்றது.